முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி திருச்சிற்றம்பலத்தில் கருனாநிதி பிறந்த நாள் விழா

சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, 100 பேருக்கு வேட்டி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Updated On : 3 ஜூன், 2024 at 11:24 PM
பேராவூரணியில் நடைபெற்ற கருனாநிதி பிறந்தநாள் விழாவில் 100 பேருக்கு வேட்டி ,சேலை வழங்கப்பட்டது.
பகிர்:

பேராவூரணி:  பேராவூரணியில் முன்னாள் முதலமைச்சா் கருணாநிதியின் 101 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அண்ணா சிலை அருகில் அவரது  உருவப்படத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, 100 பேருக்கு வேட்டி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதேபோல் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் மாவட்ட மருத்துவ அணி சாா்பில்  தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கா.அண்ணாதுரை தலைமையில் ,பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா்  ,மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் வி.செளவுந்தரராஜன் ஆகியோா் முன்னிலையில் , மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் பன்னீா்செல்வம் ஏற்பாட்டில் 300 பேருக்கு  அசைவ உணவு, சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் கோ.இளங்கோவன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.