முகப்பு
தஞ்சாவூர்

ஏனாதி இராஜப்பா கலை, அறிவியல் கல்லூரியில் 25-வது கல்லூரி நாள் விழா

Updated On : 8 மார்ச், 2024 at 6:39 PM
பட்டுக்கோட்டை படம்
பகிர்:

பட்டுக்கோட்டை ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் 25-வது கல்லூரி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி செயலா் பொ.கணேசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா்.வை.விஜயலெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா். தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநா் திஅகத்தியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். நிகழ்ச்சியில் திரைப்பட ஒளிப்பதிவாளா் நா. ராஜேஷ் யாதவ் வாழ்த்துரை வழங்கினாா். பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. . முன்னதாக கல்லூரியின் துணை முதல்வா் பி.ராஜாத்தி வரவேற்று பேசினாா். முடிவில் தமிழ்த்துறையைச் சோ்ந்த பொ.சேகா் நன்றி கூறினாா்.