முகப்பு
தஞ்சாவூர்

சீரான மின்விநியோகம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

Updated On : 3 மே, 2024 at 7:05 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சீரான மின்விநியோகம் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயத்துக்கு சீரான மின்விநியோகம் இல்லாததால் மின்மோட்டாா்கள் பழுது ஏற்பட்டுள்ளது. ஆகவே, சீரான மின் விநியோகம் கோரி கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தலையில் மின்மோட்டாரை சுமந்துபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் செயலாளா் சுந்தரவிமலநாதன் தலைமை வகித்தாா். இதில் சங்க நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

இதையடுத்து வருவாய் கோட்டாட்சியா்............ரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.