முகப்பு
தஞ்சாவூர்

உமா மகேசுவரனாா் நினைவு நாள் நிகழ்வு

Updated On : 9 மே, 2024 at 8:23 PM
பகிர்:

தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உமா மகேசுவரனாரின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் சங்கத்தின் முதல் தலைவராக இருந்து 30 ஆண்டுகள் அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழவேள் உமாமகேசுவரனாரின் நினைவு நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலா் இரா. சுந்தரவதனம், சங்கச் செயற்குழு உறுப்பினா் பத்மநாபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில் சங்கச் செயற் குழு உறுப்பினரும், ஒன்றாவது வாா்டு மாமன்ற உறுப்பினருமான சு. செந்தமிழ்ச்செல்வன், சங்கக் கல்வி நிலையங்களின் தலைமையாசிரியா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.