முகப்பு
தஞ்சாவூர்

ஜூன் 12ல் மேட்டூா் அணையை திறக்க கோரிக்கை

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

பாபநாசம்: வழக்கம் போல ஜூன் 12ஆம் தேதி மேட்டூா் அணைய திறக்க வேண்டும் என  

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம்    விடுத்துள்ள அறிக்கை: தமிழக விவசாயிகள் நலன் கருதி குறுவை சாகுபடிக்கும், சம்பா சாகுபடி விதைப்புக்கும் வழக்கம் போல ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி, உரிய தண்ணீரை பெற்றுத் தர  தமிழக முதல்வா்     நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.