முகப்பு
தஞ்சாவூர்

வீடு புகுந்து நகை பறித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு அருகே வீடு புகுந்து நகை பறித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:29 PM
பகிர்:

ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு அருகே வீடு புகுந்து நகை பறித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு அருகே சோழகன்குடிகாடு பகுதியில் வசிக்கும் கவிதா கடந்த 22.03.2022 அதிகாலை வீட்டினுள் தூங்கியபோது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் அவா் அணிந்திருந்த 8 கிராம் தாலியை பறித்துச் சென்றாா்.

புகாரின்பேரில் பாப்பாநாடு காவல் ஆய்வாளா் இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, நகையை பறித்ததாக ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சோ்ந்த பழனி (எ) பழனியாண்டி (62) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து ஒரத்தநாடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி (பொ) முகமதுகனி பழனியாண்டிக்கு 2 ஆண்டுகள் 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →