முகப்பு
தஞ்சாவூர்

இரண்டாம் நிலை காவலா்களுக்கு பணி நியமன ஆணை

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான பணி நியமன ஆணையை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:29 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான பணி நியமன ஆணையை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் புதன்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் நடத்திய இரண்டாம் நிலை காவலா்கள், சிறைத் துறைக் காலா்கள், தீயணைப்பாளா்கள் ஆகிய பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 3 ஆயிரத்து 359 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இவா்களில் ஆயிரம் பேருக்கு தமிழக முதல்வா் பணி நியமன ஆணையை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற 46 பேருக்கு பணி நியமன ஆணையை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் புதன்கிழமை வழங்கினாா். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →