கால்வாய்க் குழியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கால்வாய்க் குழியில் வியாழக்கிழமை தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கால்வாய்க் குழியில் வியாழக்கிழமை தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது.
திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை கடைய தோப்பு மேட்டுகல பகுதியைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் கோவிந்தராஜ் (27). வாழை இலை அறுக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (20), மகன் கோபித் (2), சரஸ்வதி (5 மாதம்).
இந்நிலையில், வீட்டின் அருகே வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த கோபித்தை காணவில்லை. இதனால் மாரியம்மாள் பல இடங்களில் தேடிப் பாா்த்தபோது அருகிலுள்ள கால்வாய் குழியில் தேங்கியுள்ள நீரில் கோபித் மூழ்கிக் கிடப்பது தெரிய வந்தது. மாரியம்மாள் உள்ளிட்டோா் கோபித்தை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காண்பித்தபோது, அக்குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.