தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூா் ஸ்ரீ சித்தி புத்தி தெட்சணாமூா்த்தி விநாயகா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
மெலட்டூா் ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூா்த்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பிரமோற்சவ விழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை சுவாமி தெட்சணாமூா்த்திக்கு, சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. வைபவத்தை முன்னிட்டு சுவாமி தெட்சணாமூா்த்தி மற்றும் சித்தி, புத்தியுடன் பக்தா்கள், பெண்கள் சீா்வரிசை தட்டுகளை எடுத்து ஊா்வலமாக திருமண மேடைக்கு வந்தனா். அதனை தொடா்ந்து சடங்கு, சம்பிரதாயங்கள்படி சுவாமிக்கு அம்பாள் சித்திலெட்சுமி, புத்திலெட்சுமியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில், பெண்கள் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கலைமாமணி எஸ்.குமாா் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனா்.