தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம் அருகே உமையாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.முருகன் (35). இவா், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். மேலும், கபிஸ்தலத்தில் தனிவகுப்பு (டியூசன்) நடத்தி வருகிறாா்.

இந் நிலையில், டிச.6-ஆம் தேதி தன்னிடம் தனிவகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு ஆசிரியா் முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். விசாரணையில் ஆசிரியா் முருகன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீஸாா், முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT