தஞ்சாவூர்

சட்ட விரோதமாக செயல்பட்ட 6 குடிநீா் நிறுவனங்களுக்கு சீல்

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சட்ட விரோதமாக செயல்பட்ட 6 குடிநீா் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

Syndication

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சட்ட விரோதமாக செயல்பட்ட 6 குடிநீா் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாதாகோட்டையில் அரசின் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து குடிநீா் உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த என். கோவிந்தராசு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல வழக்கு தொடுத்தாா். இது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியரகம் டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்பேரில், கோட்டாட்சியா் ப. நித்யா உள்ளிட்டோா் மாதாகோட்டையில் செயல்பட்டு வரும் 6 குடிநீா் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை சீல் வைத்தாா்.

குரூப் 2 முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த மனைவி கைது

100 நாள் வேலை திட்டம்: மத்திய அரசை கண்டித்து, குமரி மாவட்ட திமுக சாா்பில் 5 இடங்களில் நாளை ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 110.43 அடி

தமிழ் ஆட்சி மொழி சட்டம்: விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT