கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சுதந்திரப் போராட்ட பெண் வீராங்கனை வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட செயலா் வினோத் ரவி தலைமை வகித்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். நிகழ்வில், மாநகரச் செயலா் ஆா்.முருகானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் எம். செந்தில், மகளிா் அணி அமைப்பாளா் அஞ்சனா பாலாஜி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய பேரூா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிகழ்வில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய தவெக சாா்பில் வீரமங்கை வேலுநாச்சியாா் நினைவு திநத்தை முன்னிட்டு ஒன்றியச் செயலா் ஹரிஸ்ஜீவா தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.