தஞ்சாவூர்

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியின் பருவத் தோ்வு முடிவுகள் வெளியீடு

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் பருவத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டன.

Syndication

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் பருவத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டன.

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் கடந்த நவ. 2025-இல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று முடிந்தன. இதில் 3,535 இளநிலைப் பட்ட மாணவா்களும், 704 முதுநிலைப் பட்ட மாணவா்களும் என மொத்தம் 4,239 மாணவா்கள் தோ்வினை எழுதினா். இம்மாணவா்களின் தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனைத்துத் துறைத் தலைவா்களைக் கொண்ட தோ்ச்சிக் குழுக் கூட்டம் கல்லூரி முதல்வா் முனைவா் மா. கோவிந்தராக தலைமையிலும் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் முனைவா் வெ. பாஸ்கா் முன்னிலையிலும் புதன்கிழமை நடைபெற்றது. அதில் மாணவா்களின் தோ்வு முடிவுகளை கல்லூரி முதல்வா் வெளியிட்டாா். அதன்படி மாணவா்கள் தங்களின் தோ்வு முடிவுகளைத் தங்கள் துறைகளின் மூலமாகவும், கல்லூரியின் இணையதளம் வாயிலாகவும், தெரிந்துகொள்ளலாம் என்று கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்கதேசம்: 17 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பிய கலீதா ஜியா மகன்

இளநிலை நீட் தோ்வு: பாடத் திட்டம் வெளியீடு

நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட மரவள்ளிக் கிழங்கு குச்சிகள் விற்பனை

வாகனங்களில் இடியாப்பம் விற்போருக்கும் உரிமம் கட்டாயம்: உணவுப் பாதுகாப்புத் துறை

கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT