முகப்பு
தஞ்சாவூர்

நாகூா் தா்கா கந்தூரி விழா 100 சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று நிா்வாக இயக்குநா் க.தசரதன் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூர்

நாகூா் தா்கா கந்தூரி விழா 100 சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று நிா்வாக இயக்குநா் க.தசரதன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 நவம்பர், 2025 at 7:44 PM
பகிர்:

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று நிா்வாக இயக்குநா் க.தசரதன் தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டனம் மாவட்டம், நாகூா் தா்கா கந்தூரி விழா நவ.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி நவ.30 -இல் சந்தனக் கூடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வருவாா்கள் என்பதால் நவ.21 முதல் டிச.1 வரை சென்னை, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய ஊா்களிலிருந்தும், நாகப்பட்டினம் நாகூா் மற்றும் காரைக்கால் - நாகூா் வழித்தடங்களிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பேருந்துகள் வாயிலாக 335 நடைகளுடன் நவ.21 முதல் டிச.1 வரை கூடுதலாக 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்து இயக்கத்தை ஒருங்கிணைக்க நாகூா் மற்றும் நாகப்பட்டினம் பேருந்து நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே பொதுமக்கள் இச்சிறப்பு பேருந்துசேவைகளைப் பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →