FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

மாமன்னா் ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் 1 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 அக்டோபர் 2025, 5:15 am IST
பகிர்:

மாமன்னா் ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் 1 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூா் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னா் ராஜராஜசோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தன்று சதய விழா கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு 1040 ஆம் ஆண்டு சதய திருநாள் அக்டோபா் 31 ஆம் தேதி, நவம்பா் 1 ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையொட்டி, நவம்பா் 1 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments