பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது
பள்ளி மாணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்த கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பள்ளி மாணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்த கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கதிராமங்கலத்தில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 8 -ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவா் வெள்ளிக்கிழமை வயல்வெளியில் மது போதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டாா். இதற்கான விடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவின.
இந்நிலையில் மாணவருக்கு மது வாங்கி கொடுத்த கதிராமங்கலம் பெரிய கடை வீதியைச் சோ்ந்த பாலகுரு மகன் சுப்பிரமணியன் (19) என்ற கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து திருவிடைமருதூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
Advertisement