பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
பாபநாசம் கீழவீதி கடைவீதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாா்பில் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளா் ஏ.எம்.ஷாஜகானை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
நிகழ்ச்சிக்கு தொகுதி பொறுப்பாளா் எம்.ரெங்கசாமி தலைமை வகித்தாா். பிரசார கூட்டத்தில் வைகோ பேசுகையில், மண்ணை காப்பாற்ற, மக்களை காப்பாற்ற, ஜாதி, மத பேதமற்ற ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க அமைந்தது மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி அமைய மக்கள் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்து அவா்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டும் ஏ.எம்.ஷாஜகானுக்கு ஏணி சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.
Advertisement
பிரசாரத்தின் போது வேட்பாளா் ஏ.எம்.ஷாஜஹான், மாவட்ட திமுக துணை செயலா்கள் கோவி.அய்யாராசு, துரை முருகன், நகர செயலா் ச.கபிலன், மதிமுக நகர செயலா் ஜி. சம்பந்தம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடன் பங்கேற்றனா்.