முகப்பு
தஞ்சாவூர்

பள்ளி மாணவிக்குபாலியல் தொல்லை: கொத்தனாா் கைது

பேராவூரணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:48 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

பேராவூரணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  கொத்தனாா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் வசிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவி, தந்தையை இழந்தவா். தாய் வீட்டு வேலை செய்து வருகிறாா். இவா்களின் வீட்டருகே வசிப்பவா்

நாதன் (51). கொத்தனாா்.

Advertisement

இவா், மாணவியின் தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். அச்சம் காரணமாக வெளியில் சொல்லாமல் இருந்த மாணவி, கொத்தனாா் அத்துமீறி நடந்து கொண்டதால் தனது தாயாரிடம் கூறியுள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், கொத்தனாா் நாதன் மீது போக்ஸோவில் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தஞ்சாவூா் சிறையில் அடைத்தனா்.