முகப்பு
தஞ்சாவூர்

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 4:31 AM
இந்திய தேர்தல் ஆணையம்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 6:04 PM

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் 4 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் வரும் 24-ஆம் தேதி வரையும், பின்னா் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதையொட்டி, மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிபொருள்கள் சட்டத்தின்கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ள வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

Advertisement