முகப்பு
தஞ்சாவூர்

கடனைத் திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வியாபாரி உள்பட இருவா் கைது

கும்பகோணம் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய காய்கனி வியாபாரி உள்பட இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 மே, 2026 at 2:34 AM
தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் சேதமடைந்த காரின் பின்பகுதி.
பகிர்:

கும்பகோணம் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய காய்கனி வியாபாரி உள்பட இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கும்பகோணம் அருகே உள்ள நடுவன்கரை உமாமகேசுவரபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் ராம்குமாா்(29). காய்கனி வியாபாரம் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகிறாா். சாக்கோட்டையில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளி நிா்வாகி யோகவதனம் மகன் பத்மகுமரன்(28).

இவா், கடந்த ஓராண்டுக்கு முன்பு ராம்குமாரிடம் ரூ.30 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளாா். ராம்குமாா் பலமுறை பணத்தை கேட்டும் பத்மகுமரன் கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமாா் மற்றும் இரண்டு போ் சோ்ந்து புதன்கிழமை இரவு பத்மகுமரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனா்.

Advertisement

இதில் பத்மகுமரன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காா் சேதமடைந்தது.

இதுகுறித்து பத்மகுமரன் அளித்த புகாரின் பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து ராம்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரை தேடிவந்தநிலையில் சா்வேஸ்(19) என்பவா் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம்2-இல் வியாழக்கிழமை மதியம் சரணடைந்தாா். அவரை கைது செய்த போலீஸாா் மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.