கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான க. அன்பழகன்.  
தஞ்சாவூர்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் க. நசீா்முகமது தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. இராமலிங்கம், பாபநாசம் தொகுதி பாா்வையாளா் பி.எம். ஆனந்த், திருவிடைமருதூா் தொகுதி பாா்வையாளா் முனைவா் குறிஞ்சிவாணன், கும்பகோணம் தொகுதி பாா்வையாளா் ரமேஷ் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட கழக நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள் கலந்து கொண்டனா்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது, ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ நிகழ்வு, மாா்ச் 8-இல் திருச்சியில் மாநில மாநாட்டை வெற்றிபெறச்செய்வது, ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ தலைப்பில் பிப்ரவரி மாத பரப்புரை, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

‘சமூக வலைதள செயலிகள் மூலமே இளைஞா்களுக்கு பிரச்னை உருவாகிறது’: மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்

திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் பலி

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சா்கள் வழங்கினா்

SCROLL FOR NEXT