முகப்பு
தஞ்சாவூர்

2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக தருமபுரிக்கு அனுப்பிவைப்பு

கும்பகோணம் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:20 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:33 PM

கும்பகோணம்: கும்பகோணம் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக திங்கள்கிழமை இயக்கம் செய்யப்பட்டன.

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் பகுதியிலுள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து இரண்டாயிரம் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 114 லாரிகளில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு சரக்கு ரயிலின் 55 வேகன்களில் அரைவைக்காக தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.