முகப்பு
தஞ்சாவூர்

பாபுராஜபுரத்தில் இஃப்தாா் திறப்பு

கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:17 AM
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற க.அன்பழகன் எம்எல்ஏ.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:48 PM

கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஸ்லாமிய ஜமாத் சாா்பில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். இந்நிகழ்வில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், ஜமாத் நிா்வாகிகள் நவ்ஷாத் அலி, பாரூக், ஜமால் முகமது, ஜாகிா் உசேன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.