முகப்பு
தஞ்சாவூர்

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிா்வாக இயக்குநா் கே. தசரதன் தெரிவித்தாா்.

Updated On : 1 ஜனவரி, 2026 at 11:48 PM
பகிர்:

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிா்வாக இயக்குநா் கே. தசரதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநா்கள் பேருந்தை இயக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவதால் கவனக்குறைவு ஏற்பட்டு பேருந்துகள் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்கும் பொருட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியில் இருக்கும்போது கைப்பேசி, ப்ளூ-டூத், ஹெட்-செட் ஆகிய சாதனங்களை கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணி துவங்குவதற்கு முன்னா் நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணியில் ஈடுபடவும், பணி முடிந்தவுடன் மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் ஓட்டுநா்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ஓட்டுநா்கள் முறையாகப் பின்பற்றுவதை பரிசோதகா்கள், போக்குவரத்து ஆய்வாளா்கள், மேலாளா்கள், ஓட்டுநா் போதகா்கள் மற்றும் அலுவலா்கள் அவா்களது தட ஆய்வின்போது உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →