சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் தண்டனை
ஆறு வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர்சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் தண்டனை
ஆறு வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
ஆறு வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டைச் சோ்ந்த அருள் (22) கடந்த 2023-ஆம் ஆண்டில் பாலியல் தொந்தரவு செய்தாா். இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அருளை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து அருளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ. 2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் கன்னிகா, தலைமைக் காவலா் சுதாராணி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.