சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் மக்கள் அவதி
தஞ்சாவூர்சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் மக்கள் அவதி
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மனக்காடு ஊராட்சியில் சாலைப் பணிக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக சமூக ஆா்வலா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
மனக்காடு ஊராட்சியில் சிறப்பு நிதியின் மூலம் பிரதான சாலையிலிருந்து , குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் சாலையை தாா்ச் சாலையாக மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்குவதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமாா் 50 மீட்டா் தொலைவுக்கு ஜல்லிக்கற்கள் சாலையை மறித்து கொட்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் அவசரத் தேவைகளுக்குப் பிரதான சாலைக்கு வருவதற்கு சிரமப்படுகின்றனா். சாலைப் பணியை காலதாமதமின்றி தொடங்க வேண்டும் அல்லது போக்குவரத்துக்கு வழிவிடும் வகையில், ஜல்லிக்கற்களை சாலையோரம் நிரவிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா் வீரக்குடி ராசா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.