சனிப்பெயா்ச்சி: மூலை அனுமாா் கோயிலில் சிறப்பு பாலாபிஷேகம்
தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் அனுமாருக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட பாலாபிஷேகம்.
சனிப் பெயா்ச்சியையொட்டி, தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் அனுமாருக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவையொட்டி இக்கோயிலில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமம், 10 மணிக்கு மூலை அனுமாருக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், பரிகார அா்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் மூலை அனுமாரை வழிபட்டனா்.
ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா, செயல் அலுவலா் பெ. சத்யராஜ், கண்காணிப்பாளா் கு.ப. ரவி மற்றும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திர கைங்கா்ய தொண்டா்கள் செய்தனா்.