முகப்பு
தஞ்சாவூர்

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே புதன்கிழமை மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தாா்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:14 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

கும்பகோணம் அருகே புதன்கிழமை மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மருதநல்லூா், பதினோறுவேலி, மேலத் தெருவைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து மகள் தமிழரசி (55). திருமணம் ஆகாதவா். இந்நிலையில் தமிழரசி புதன்கிழமை விறகுசேகரிக்க அருகே உள்ள வயற்காட்டுக்குச் சென்றாா். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தமிழரசி உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.