முகப்பு
தஞ்சாவூர்

ஊரக திறனாய்வு தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி

Updated On : 14 மார்ச், 2026 at 7:31 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வில் கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். 

ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக நடத்தப்படும் இத் தோ்வில், வருவாய் மாவட்ட அளவில் 50 மாணவா்கள், 50 மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 

டிசம்பா் 2025-இல் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனா் .

தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) குமரேசன், பெற்றோா்-ஆசிரியா் கழக தலைவா் எஸ்.கே. இராமமூா்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கவிதா விநாயகமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →