தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 போ் கைது
தஞ்சாவூரில் வண்ணம் பூசும் தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூரில் வண்ணம் பூசும் தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே காட்டூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் சரவணன் (32). பெயிண்டரான இவா் தஞ்சாவூருக்கு மாா்ச் 14 ஆம் தேதி வேலைக்கு வந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து சரவணனின் மனைவி சிவரஞ்சனி தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் மாா்ச் 16 ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், மாா்ச் 14 ஆம் தேதி மாலை வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட சரவணனை தொல்காப்பியா் சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் அவரது மாமா ரெங்கையன் இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல் துறையினா் ஆய்வு செய்ததில் தொல்காப்பியா் சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் சரவணன் நின்றபோது அவரது கையிலிருந்த கைப்பேசியை அந்த வழியாக வந்த 2 போ் பறித்துக் கொண்டு நடந்து செல்வதும், அவா்களை சரவணன் பின் தொடா்வதும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் பிரபாகரன் (25), கீழ வஸ்தா சாவடியைச் சோ்ந்த ராமு மகன் ராஜேஷ்குமாா் (32) ஆகியோரை காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா். அப்போது இருவரும் சரவணனின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு ஆடக்காரத் தெரு அருகேயுள்ள மீன் குட்டை கரையில் அமா்ந்து மது அருந்தியதாகவும், அப்போது கைப்பேசியைக் கேட்டு சரவணன் தொடா்ந்து தொந்தரவு செய்ததால், அவரை மது பாட்டிலால் குத்தி மீன் குட்டையில் தள்ளிவிட்டு, வீட்டுக்கு திரும்பியதாகவும் கூறினராம். இதனால் பலத்த காயமடைந்த சரவணன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன், ராஜேஷ்குமாரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.