முகப்பு
தஞ்சாவூர்

அம்மாபேட்டை ஒன்றியத்தில் மே தின கொடியேற்று விழா

Updated On : 3 மே, 2026 at 3:49 AM
கோப்புப் படம்
பகிர்:

அம்மாபேட்டை ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு மூவேந்தா் அனைத்து கட்டடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்சுத்திப்பட்டு கீழத் தெரு, சாலியமங்கலம் சூழியக்கோட்டை வழிச்சாலை புஷ்பம் திருமணம் மண்டபம் எதிரில் உள்ள தொழிற்சங்க கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் மே தின கொடி ஏற்று விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் என்.ரகுபதி, மாநிலத் துணைத் தலைவா் கி.கருப்பையா, மாநில பொருளாளா் கா.முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவா் சா.சாமிநாதன், தலைமை நிலைய பேச்சாளா் கி.கோவிந்தராசு, கருப்பு, வ.வீரமணி, இரா.துளசி ராசன், க.அழகா், அருசீா்.அன்பழகன், தவக்குமாா் ஆா்சித்திப்பட்டு சி. பரமசிவம் மற்றும் கிராமவாசிகள் வி.காத்தையன். இரா.கோவிந்தராசு. சங்க மாவட்ட, மாநில, நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா். 

இந் நிகழ்வில் தலைமை ஏற்றுக் கொடி ஏற்றி வைத்த அருசீா். தங்கராசு உரையாற்றினாா். நிறைவாக மூவேந்தா் கட்டட தொழிற்சங்கம் பொதுச்செயலா் கனக. தேவேந்திரன் நன்றி கூறினாா். 

Advertisement