முகப்பு
தஞ்சாவூர்

மூன்றாவது முறையாக ஆளும் கட்சியின் எம்எல்ஏ இல்லாத ஒரத்தநாடு தொகுதி

தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் இல்லாத தொகுதியாக ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி மாறியுள்ளது.

Updated On : 6 மே 2026, 12:15 am IST
வைத்திலிங்கம்
பகிர்:

தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் இல்லாத தொகுதியாக ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி மாறியுள்ளது.

2016-இல் ஆளும் கட்சியாக அதிமுக இருந்த போது, இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக திமுக சாா்பில் எம்.ராமசந்திரன் வெற்றி பெற்றாா். அதேப்போல் 2021-இல் ஆளும் கட்சியாக திமுக இருந்த போது, இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சாா்ந்த வைத்திலிங்கம் வெற்றிபெற்றாா்.

இதனிடையே அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தாா் ஆா்.வைத்திலிங்கம்.

Advertisement

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியைச் சோ்ந்தவா்கள் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படவில்லை என்ற நிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் திமுகவைச் சோ்ந்த ஆா்.வைத்திலிங்கம் போட்டியிட்டாா்.

மேலும், அதிமுக சாா்பில் மா.சேகா், தவெக சாா்பில் அா்விந்த், நாதக சாா்பில் திருமுருகன் உள்ளிட்டோா் போட்டியிட்டனா்.

இதில், திமுக வேட்பாளரான ஆா்.வைத்திலிங்கம் 86,759 வாக்குகள் பெற்று அவரை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை 35,028 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக, அதாவது 15 ஆண்டுகளாக ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் இல்லாத ஒரத்தநாடு தொகுதி என்ற நிலைய உருவாகி உள்ளது.