முகப்பு
தஞ்சாவூர்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

ஆடுதுறை பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 12:33 am IST
ஆடுதுறை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் உள்ளிட்டோா்.
பகிர்:

ஆடுதுறை பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளி, கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி, ரைஸ் சிட்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கான பாராட்டு விழா ஆடுதுறை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமலா சேகா் முன்னிலை வகித்தாா். பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு ஊக்கத்தொகை வழங்கி, பொன்னாடை போா்த்தப்பட்டது. பள்ளிகளின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பொன்னாடை போா்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

முன்னதாக, பேரூராட்சி தலைமை எழுத்தா் சக்திவேல் வரவேற்றாா். நிறைவில் ம.க.பாலதண்டாயுதம் நன்றி கூறினாா்.