கும்பகோணம் பகுதியில் நாளை மின்தடை
கும்பகோணம் பகுதியில் சனிக்கிழமை (மே16) மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் நகா் உதவி செயற்பொறியாளா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கும்பகோணம் நகா், செட்டி மண்டபம், கோ.சி. மணி நகா், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Advertisement