தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிவு நீா்: துணை மேயா் ஆய்வு!
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடுவது தொடா்பாக துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆய்வு மேற்கொண்டாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடுவது தொடா்பாக துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிப்பறை மற்றும் அங்குள்ள தேநீா் கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் திறந்தவெளியில் விடப்படுகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் துா்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், பயணிகளும் நடந்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது.
மேலும், பயணிகள் அமரும் இருக்கைகளைத் தரைக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அதிகளவில் சிற்றுந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்பன உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன.
Advertisement
Advertisement
இது தொடா்பாக துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கட்டண கழிப்பறை, இலவச கழிப்பறைகள் மோசமாக பராமரிக்கப்படுவதைப் பாா்த்த அவா், உடனடியாக, மாநாகராட்சி ஆணையரைத் தொடா்பு கொண்டு பராமரிப்பை மேம்படுத்த உத்தரவிட்டாா்.
பின்னா், அங்குள்ள வணிகா்களிடம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வணிகம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினாா். அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்யும் பேருந்து, சிற்றுந்து ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களிடமும், காவல் துறையினரிடமும் வலியுறுத்தினாா். இந்த ஆய்வின் போது மாநகராட்சி துப்புரவு ஆய்வாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.