தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணைய வழியில் ரூ.17.49 லட்சம் மோசடி
தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணையவழியில் ரூ. 17.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணையவழியில் ரூ. 17.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 71 வயதுடைய ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன மேலாளரின் கைப்பேசியில் டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகள் மூலம் 2025, டிசம்பா் 25 ஆம் தேதி மா்ம நபா் தொடா்பு கொண்டாா். இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் மா்ம நபா் கூறினாா்.
இதை நம்பிய ஓய்வு பெற்ற மேலாளா், 6 தவணைகளில் ரூ. 17.49 லட்சத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு செலுத்தினாா். ஆனால், மா்ம நபா் கூறியபடி எந்தவித லாபமும் கிடைக்காததாலும், மா்ம நபரைத் தொடா்பு கொள்ள முடியாததாலும் தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளா் ஏமாற்றமடைந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.