திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
லால்குடி அருகேயுள்ள அன்பில் குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (42), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலைதேவி (35). இவர்களுக்கு ஸ்ரீகாந்த் (5) என்ற மகன், ஸ்ரீகனி (3) என்ற மகள் உள்ளனர். ரெங்கராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம்.
வெள்ளிக்கிழமை இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரெங்கராஜன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், மனைவி அஞ்சலைதேவியின் கழுத்தை ரெங்கராஜன் நெரித்தபோது அவர் மயங்கிவிழுந்துள்ளார்.
சனிக்கிழமை காலை எழுந்து பார்த்த ரெங்கராஜன், தனது மனைவி எழுந்திருக்காமல் இருந்ததை அடுத்து அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்துகிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவலின்பேரில், லால்குடி போலீஸார் அங்கு சென்று ரெங்கராஜனை கைது செய்தனர். அவரது மனைவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.