நடிகர் சூர்யா ரசிகர்கள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மன்றத்தின் மாவட்டத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். செயலர் மருதூர் பாலா, பொருளாளர் விக்னேஷ், துணைத் தலைவர்கள் கண்ணதாசன், தினேஷ், ஆலோசகர் தென்னூர் குமரன் உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள், மன்றத்தினர் பங்கேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.