மணப்பாறை அருகே பிடிபட்ட மலைப்பாம்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறைஅருகே தேனூர் ஊராட்சி முருக்கப்பட்டி கிராம விவசாய நிலத்தில் சனிக்கிழமை மாலை 12 அடி நீள மலைப்பாம்பு அந்தப் பகுதிக்குச் சென்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறைஅருகே தேனூர் ஊராட்சி முருக்கப்பட்டி கிராம விவசாய நிலத்தில் சனிக்கிழமை மாலை 12 அடி நீள மலைப்பாம்பு அந்தப் பகுதிக்குச் சென்றது.
இதைக் கண்ட கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த சிவக்குமார், நாகேந்திரன் உள்ளிட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து, மணப்பாறை வனத் துறையினரிடம் ஒப்படைக்க, அவர்கள் வளநாடு அருகேயுள்ள பாளைமுத்து வனப்பகுதியில் பாம்பை கொண்டு சென்று விட்டனர்.