திருச்சி

திருச்சி அன்பாலயம் தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி

DIN

திரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் ஃபேன்ஸ் சாரிடபுள் பவுண்டேசன் சார்பில் அன்பாலயம் தொண்டு நிறுவனம் மற்றும்  லூப்ரா பார்வையற்றோர் இல்லத்துக்கு  நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில்  ஆண்டுதோறும் நாட்டின் முக்கிய நகரமொன்றில் நடைபெறும் ஆண்டு சந்திப்புக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. திரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன், அவரது மகன் எஸ்.பி.பி. சரண், திரைப்பட பின்னணி பாடகி பி. சுசீலா ஆகியோர்  உரையாற்றினார். விழாவில், திருச்சியிலுள்ள அன்பாலயம் தொண்டு நிறுவனம் மற்றும் லூப்ரா பார்வையற்றோர் இல்லத்துக்கு தலா ரூ. 65,000 வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டது. 
இதற்கான காசோலையை அன்பாலயம் நிறுவனர்  செந்தில்குமாரிடம் பாடகி பி. சுசீலா வழங்கினார்.  திருச்சி நகைச்சுவை மன்றச் செயலர் க. சிவகுருநாதன், அமைப்பின்  உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர் டி. வீரசக்தி, ராகம் அருண்,  ரங்கநாதன், பரமேசுவரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT