திருச்சி

வருவாய் ஆய்வாளரை தாக்க முயன்றவர் கைது

DIN

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாலை நேரம் அல்லது விடுமுறை தினங்களில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்துவார்களாம். இதனை  வருவாய் ஆய்வாளர் யோகராஜா பலமுறை கண்டித்துள்ளார்.  இந்நிலையில், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (32), முரளி உள்ளிட்ட சிலர் சனிக்கிழமை மாலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மது அருந்தியுள்ளனர். அதனை யோகராஜா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள்  பீர் பாட்டிலை உடைத்து யோகராஜாவை தாக்க முயன்றனர்.  புகாரின் பேரில்  திருவெறும்பூர் போலீஸார் வெங்கடேசனை புதன்கிழமை கைது செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT