திருச்சி

தொட்டியம் அருகே  குடிநீர் கேட்டு மறியல்

DIN

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே குடி நீர் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை  சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், எம்.புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குடித்தெரு பகுதியில் கடந்த  2 வாரங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலி குடத்துடன் தொட்டியம் - காட்டுப்புத்தூர் சாலையில் எம். புத்தூர்  பேருந்து  நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் மற்றும் தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT