முகப்பு
திருச்சி

இளையராஜா மீது கிறிஸ்தவர்கள் போலீஸில் புகார்

இசைஞானி இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு கொடுத்தனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 7:07 AM
பகிர்:

இசைஞானி இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு கொடுத்தனர்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி  மாவட்டச் செயலாளர் தி. செல்வராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள், புதன்கிழமை காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பது :
இசைஞானி இளையராஜா, கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப் படுத்தும் வகையில், இயேசுகிறிஸ்து உயிர்ப்பித்தல் குறித்த தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. 
மேலும் தவக்காலம் நடந்து வரும் நிலையில் இதுபோன்று கூறியிருப்பது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
எனவே இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.