முகப்பு
திருச்சி

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மின்விசை சைலா வீல்கள்

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் 72 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மின்விசை சைலா வீல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 22 மே, 2018 at 2:32 AM
பகிர்:

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் 72 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மின்விசை சைலா வீல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் 2016-17 ஆண்டுக்கான மழைக்கால பராமரிப்பு உதவித் தொகை பெற்ற 2,000 மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு முதல்கட்டமாக மின்விசை சைலா வீல்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, மார்ச் 23 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி மற்றும் அரசு விழாவில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.20,400 மதிப்பில் மின்விசை சைலா வீல்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை காதி கிராப்ட் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இந்த நிகழ்வில் பங்கேற்று சைலா வீல்களை வழங்கினார். நிகழ்வில், காதி கிராப்ட் மண்டலத் துணை இயக்குநர் என். மணிவாசகன், உதவி இயக்குநர் பாலகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.