திருச்சி

போலி கடவுச் சீட்டில் இலங்கை செல்ல முயன்ற தம்பதி கைது

DIN

போலி கடவுச்சீட்டில் இலங்கை செல்ல முயன்ற தம்பதியை திருச்சி விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.
மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சந்திரவதன் (49). இவரது மனைவி சித்ரா (48). இலங்கை குடியுரிமை பெற்றவர். இருவரும் திருப்பூர் வேலாயுதம்பாளையத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும், திருச்சியில் இருந்து விமானத்தில் புதன்கிழமை இலங்கைக்கு செல்ல முயன்றனர். இவர்களது கடவுச்சீட்டை அதிகாரிகள் சோதனை செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் தயாரித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் திருச்சி விமானநிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT