திருச்சி

திருச்சி நீதிமன்ற வளாகத்தில்   வழக்கு விவரம் அறிய தொடுதிரை கணினி வசதி அறிமுகம்

DIN

நீதிமன்றங்களில் வழக்கு விவரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தொடு திரை கணினி வசதி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சிக்கு  முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். குமரகுரு தலைமை வகித்து, தொடு திரை கணினி வசதியை தொடங்கி வைத்தார்.  
இதில் மாவட்டத்தில் உள்ள 28 நீதிமன்றங்களிலும் நடைபெற்று வரும் வழக்கு விவரம் அதாவது, வழக்குரைஞர், வாய்தா தேதி, ஒத்தி வைக்கப்பட்ட விவரம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள முடியும். 
நிகழ்வில் அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ஜெயசீலன், குற்றவியல் வழக்குரைஞர் சங்க தலைவர் ராஜேந்திரகுமார், பெண் வழக்குரைஞர் சங்க செயலாளர் ஜெயந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT