திருச்சியில் லேசான மழை
திருச்சியில், ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை வேளைகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.
திருச்சியில், ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை வேளைகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.
திருச்சி சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், திருச்சி மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக மழை வருவதுபோல மேகம் திரண்டு இடி மின்னல் ஏற்பட்டாலும் மழை பெய்யவில்லை.
இந்நிலையில் திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை சற்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. பகல் முழுவதும் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பிற்பகலில் சுமார் அரை மணி நேரம் லேசானமழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் மழை இந்த மழை காணப்பட்டது. லேசான மழை என்பதால் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படவில்லை.