திருச்சி

கோ-கோ போட்டி: சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி சாம்பியன்

DIN

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கோ-கோ போட்டியில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட8 மாவட்டங்களைச் சேர்ந்த 34 கல்லூரிகளைச் சேர்ந்த 340 மாணவிகள் பங்கேற்ற கோ-கோ போட்டி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. 
இதில் இறுதிப் போட்டியில்  திருச்சி புனித சிலுவைக் கல்லூரியை 8-7 என்ற புள்ளிக்கணக்கில் வென்று பல்கலைக்கழக சாம்பியன் பட்டத்தை சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி கைப்பற்றியது.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியை 9-7 என்ற புள்ளிக்கணக்கில் வென்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 
வெற்றி பெற்ற  சீதாலட்சுமி கல்லூரிக்கு அந்தக் கல்லூரி முதல்வர் ஆர். பத்மாவதி பரிசு வழங்கினார். என். ராமசுவாமி அய்யர் கல்வி வளாக ஆலோசகர் உஷா சந்திரசேகர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஏ. ஷகிலா, உடற்கல்வி இயக்குநர் டி. சுதாமதி, பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆர். நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT