திருச்சி

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை அருகே குளிர்சாதன வசதியுடன் நிழற்குடை

DIN

திருச்சியில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு அருகே குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார். காவல் ஆணையர் அ.அமல்ராஜ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி, நெடுஞ்சாலை,  மின்வாரியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், காவேரி மருத்துவமனை மற்றும் குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு அருகாமையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணியர் நிழற்கூடங்கள் அமைப்பது, அவற்றை அருகில் உள்ள  கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்கள் நிர்வகிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT