திருச்சி

நகைக்கடையில் மோசடி:தம்பதி மீது வழக்கு

DIN

திருச்சி நகைக்கடையில் ரூ.42 ஆயிரம் மோசடி செய்த தம்பதியர் மீது கோட்டை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பெரியகடைத்தெரு நடுக்கறிக்கடைச் சந்து பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் மாரியப்பன் மகன் அறிவழகன்(34). இவரிடம் திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்த சங்கர்(48), இவரது மனைவி ஜெயந்தி(40) இருவரும் தாலிச்சங்கிலி செய்த தொகை ரூ.42,228ஐ கொடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில், கோட்டை காவல் நிலையத்தில் அறிவழகன் அளித்த  புகாரின் பேரில் தம்பதியர் மீது காவல் சார்பு -ஆய்வாளர் சிற்றரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

SCROLL FOR NEXT